செய்திகள்

திரையுலகை ஆளும் முண்டாசு கவிஞர்

அடிமைபட்ட மக்களுக்கு பாடல்கள் மூலம் விடுதலை வேட்கையை தூண்ட முடியுமா என்ற கேள்விக்கான விடை தான் பாரதியார். தேசப்பற்று, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு என பாடல்கள் வாயிலாக அவர் கொடுத்த புரட்சிக் குரல், சமூகத்தில் இன்றும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. 38 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த அந்த மகாகவி, பாடல்களாக, புதுக்கவிதைகளாக அளித்த பொக்கிஷங்கள் ஏராளம்.

பாட்டுக்கொரு புலவன் என போற்றிப் புகழப்பட்ட பாரதியின் பாடல் வரிகள் பல ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் தலைப்பாகவும், பாடல்களாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி, தற்போதைய காலத்தில் உள்ள இளம் இசையமைப்பாளர்கள் வரை பாரதியாரின் பாடல்களுக்கு இசையமைத்து திரைப்படங்களில் பயன்படுத்தி வருவது தான் அந்த முண்டாசு கவிஞரின் வெற்றிக்கான அடையாளம்…

அண்மை காலமாக ஆங்கில வார்த்தைகள் தமிழ் சினிமாவின் தமிழ் சினிமாவில் ஆங்கில தலைப்புகள் வரத் தொடங்கினாலும் கூட, பாரதியின் வரிகளுக்கான வலிமை குறையவில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு தான் வருகிறது.

பாதிக்கப்பட்ட 3 பெண்களுக்காக கதாநாயகன் சட்டப்போராட்டம் நடத்தும் பிங்ஃக் இந்தி திரைப்படம், தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என வெளியானது. இந்த படத்தின் தலைப்பு, நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் என பெண்ணடிமைத் தனத்துக்கு எதிராக பாராதியார் பாடிய பாடல் வரிகளில் உருவானது தான்..

இதேபோல், ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற சூர்யாவின் சூரரைப்போற்று பட தலைப்புக்கும் சொந்தக்காரர் பாரதி தான். பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் இடம்பெற்ற இந்த வரிகள், தடைகளை தகர்த்து கிளைமேக்சிஸ் சாதித்துக் காட்டும் சூரரை, போற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்துவிடும்.

இதுமட்டுமின்றி, இயக்குநர் பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும், மணி ரத்தினத்தின் காற்று வெளியிடை, பார்த்தீபன் நடித்த காக்கை சிறகினிலே, மிஷ்கினின் நந்தலாலா மற்றும் தாயின் மணிக்கொடி, அச்சமில்லை அச்சமில்லை, அச்சம் தவிர், ஆண்மை தவறேல், நையப்புடை, சூது கவ்வும் என பாரதியாரின் சிந்தையில் உதித்த வரிகள் தாங்கிய படங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்…

இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படமான வெந்து தணிந்தது காடு. அக்கினி குஞ்சொன்று கண்டேன் என்ற ஆக்ரோசமான பாடலில் இடம்பெற்ற அந்த வரிகளுக்கு ஏதுவாக, தீப்பிடித்து அணைந்த வனப்பகுதியில் சின்னஞ்சிறுவனாக கையில் கம்புடன் நிற்கிறார் சிம்பு.

எப்படி இருந்தாலும் இந்த பட்டியல் இத்தோடு நின்றுவிட போவதில்லை. இளம் வயதிலிலேயே மாண்டாலும், தனது தமிழால் தலைமுறை தாண்டியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அந்த மீசைக்கார கோட்சூட் புலவன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

இரண்டரை வயது குழந்தையை அடித்து கொன்ற பெரியப்பா கைது

EZHILARASAN D

கோரமண்டல் ரயில் விபத்து: ஒரே இரவில் 500 யூனிட் ரத்த தானம் செய்த பொதுமக்கள்!

Web Editor

காய்சினிவேந்தப்பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading