31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் செய்திகள்

தலையில் சிக்கிய பாத்திரம்: முட்டி மோதித் தவித்த குட்டிக் குரங்கு!

தண்ணீர் குடிக்கச் சென்ற குட்டி குரங்கின் தலை, பாத்திரத்தில் மாட்டிக் கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் குடியிருப்பு பகுதியில், பசி மற்றும் வெயில் கொடுமையால், உணவு தேடியும், தண்ணீருக்காகவும் ஏராளமான குரங்குகள் சுற்றி வருகின்றன. இந்நிலையில், ஒரு வீட்டில் பாத்திரத்தில் இருந்த தண்ணீரை குட்டிக் குரங்கு ஒன்று குடிக்க முயன்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது எதிர்பாராதவிதமாக குட்டிக்குரங்கின் தலை பாத்திரத்துக்குள் சிக்கிக்கொண்டது. அதில் இருந்து தலையை குரங்கால் எடுக்க முடியவில்லை. இதனால் அங்கும் இங்கும் தவித்த குட்டி, அருகில் இருந்த கம்பியை பிடித்து, வீட்டின் மேலே ஏறியது.

வீட்டின் கூரையில் தாய் குரங்கு வந்ததும் குட்டியின் தலையில் இருந்து தலையில் இருந்து, பாத்திரத்தை எடுக்க முயன்றது. முடியவில்லை.

இதனைக் கண்ட அந்தப் பகுதியினர், வனத்துறைக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் குரங்குக் குட்டியைப் போராடி பிடித்தனர். பின்னர் அதன் தலையில் இருந்த அலுமினிய பாத்திரத்தை வெட்டை எடுத்து குட்டியை விடுவித்தனர். தலையில் இருந்து பாத்திரம் எடுக்கப்பட்டதும் தலைத்தெறிக்க ஓடியது குட்டிக் குரங்கு!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

Jeba Arul Robinson

சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? – நீதிபதிகள் கேள்வி

Syedibrahim

தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் பி.டி.ஆர்

Gayathri Venkatesan