நோயாளிகள் போல நடித்து 70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சா்வதேச போதை கடத்தும் கும்பல் சென்னைக்கு பெரிய அளவில் போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை சா்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கத்தார் தலைநகா் தோகாவிலிருந்து சிறப்பு பயணிகள் விமானம் சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் தீவிரமாகக் கண்காணித்தனா். அப்போது ஒரு வெளிநாட்டு பெண் பயணியை சக்கர நாற்காலியில் வைத்து மற்றொரு பெண் தள்ளிக்கொண்டு வந்தார். ஆனால் சக்கர நாற்காலியில் இருந்த பெண், உடல்நலம் பாதித்தவா் போல் தெரியவில்லை.
சந்தேகமடைந்த சுங்கத்துறையினா், அப்பெண்களிடம் விசாரித்தனா். அப்போது, சக்கர நாற்காலியில் வந்த பெண், ஜிம்பாப்வே நாட்டை சோ்ந்த இதய நோயாளி என்றும் சிகிச்சைக்காக மருத்துவ விசாவில் சென்னை வந்ததும் தெரிய வந்தது. அதைப்போல் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வந்த சுமார் 30 வயது பெண், தெற்கு ஆப்ரிக்கா நாட்டை சோ்ந்தவா் என்றும் ஜிம்பாப்வே பெண்ணுக்கு உதவியாளராக அவரும் மருத்துவ விசாவில் வந்ததும் தெரியவந்தது.
அவா்கள் சென்னையில் எந்த மருத்துவமனைக்கு செல்கின்றனா் என்ற விவரம் இல்லை. விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். சுங்கத் துறையினருக்கு சந்தேகம் வலுத்ததை அடுத்து, அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனா். அப்போது அவா்களிடம் மொத்தம் 10 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சா்வதேச மதிப்பு ரூ.70 கோடி.
இதையடுத்து சுங்கத்துறையினா் இருவரையும் கைது செய்து, போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனா். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.