திருச்செந்தூர் செல்வோர் கவனத்திற்கு! கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் – சென்னை…

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் இடையே இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 6-ஆம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம் விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி,மதுரை திண்டுக்கல்,விருதுநகர், சாத்தூர் வழியாக 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

அதேபோல வருகிற 7-ஆம் தேதி இரவு திருச்செந்தூரிலிருந்து இரவு 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது ஆறுமுகநேரி, நசரத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல்,திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக 8 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.