25.5 C
Chennai
September 24, 2023
செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 28 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் பறிமுதல் -சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் காலணியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 28 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து அவரை சோதனை செய்த போது காலணியில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.28 லட்சத்து 30 ஆயிரத்து 954 மதிப்பிலான 467 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் -திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியா சிங்கப்பூர்,துபாய்,இலங்கை, ஷார்ஜா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

பிஎஃப்ஐ அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: இந்திய தேசிய லீக் கட்சி கண்டனம்

EZHILARASAN D

”உங்கள் அன்பிற்கு நன்றி” – ஜெயிலர் பட வெற்றி குறித்து சிவராஜ் குமார் நெகிழ்ச்சி!

Web Editor

அகத்தியர் மலையில் புதியவகை பட்டாம்பூச்சி!

எல்.ரேணுகாதேவி