ஆறுமுகசாமி அறிக்கையை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மருது பாண்டியர்களின் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அவரது சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி சம்பவத்தை எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சியில் பார்த்து,
பொய்யான பேட்டி அளித்தது நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் மூலம் தெளிவாக
தெரியவந்துள்ளதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அறிக்கையில் சாட்டப்பட்ட யாராக
இருந்தாலும் பாராபச்சமின்றி தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுமுகசாமியின் அறிக்கை ஒரு அரசியல்வாதியின் அறிக்கை போல் உள்ளதாகவும், ஆறுமுகசாமியின் அறிக்கையின்படி இனி முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் கூட
மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்க தயங்குவார்கள்.
எந்த முகாந்திரமும் இல்லாமல் தமிழ்நாட்டில் பெருமையாக நினைக்கக்கூடிய
மருத்துவர்கள், நிபுணர்களை ஆறுமுகம் ஆணைய அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது
ஏற்புடையது அல்ல.
அரசியல்வாதிகளை குற்றம் சொல்வது ஒருபுறம் இருக்க, நேர்மையான அதிகாரியான
ராதாகிருஷ்ணன் மீது குற்றம் சாட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சட்ட அமைச்சர் ரகுபதி கூட நாளை மருத்துவமனை செல்லலாம். அவருக்கு மருத்துவம்
பார்க்க கூட மருத்துவர்கள் தயக்கம் காட்டும் சூழ்நிலை வரும். எதற்காக இந்த குற்றச்சாட்டை ஆறுமுகசாமி ஆணையம் வைத்துள்ளது என்பதை சி பி ஐ
வெளிகொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அரசுக்கு ஆதரவாக சமூக விரோதிகள் வந்தார்கள் என பேசியதால் ரஜினிகாந்த்
மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்ப்பது குறித்து எங்களது நிலைப்பாடு தேர்தலுக்கு முன்னர் தெரிய வரும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக நிலைப்பாட்டை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை
ஒருங்கிணைப்பாளர் தான் கூறவேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.