தமிழ் நாட்டில் தவெக தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. இக்கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் தமிழ் நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
தவெக அரசு சட்டமன்றத்தின் முதல் நாள் என்பதால், இந்த கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. அதன் படி சட்டமன்றத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கருக்கு அரசு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ் நாட்டின் 17 அவது சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியுள்ளது,
தற்போது தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்கேக்கர் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தி வருகிறார்.




