31.7 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களா? அமைச்சர் விளக்கம்

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப் படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே இனி, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், திருவாரூர் அருகே இளவங்கார்குடியில் புதிய ரேஷன் கடையினை உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் பொதுமக்களுக்கு சிலிண்டர் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கல்லணையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பயிர்களுக்கு தேவையான நீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்றும், அதே சமயம் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading