37.6 C
Chennai
June 16, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள்

“கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளிவரும் ” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

“கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளிவரும் ”  என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.02) காலை நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“ஆலோசனை கூட்டத்திற்ல் எனக்கு முழு அதிகாரம் தந்துள்ளனர்.  அதிகாரத்தை
பயன்படுத்தி நல்ல முடிவை சீக்கிரம் எடுப்பேன்.  விஜய் கட்சியை தொடங்கியதற்கு வாழ்த்துகள்.  விஜய்க்கு நான் அறிவுரை வழங்க முடியாது.  அதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை.  நாடாளுமன்ற தேர்தல் சமத்துவ மக்கள் கட்சியின் இலக்கு இல்லை.  2026 சட்டமன்ற தேர்தல் தான் சமத்துவ மக்கள் கட்சியின் இலக்கு.  திமுக-விலிருந்து கூட்டணி குறித்து எந்த அழைப்பும் வரவில்லை.

வெளிநாட்டில் இருந்த காரணத்தால் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய
முடியவில்லை. விரைவில் மழை, வெள்ள நிவாரணம் வழங்குவோம்.  விஜய் குறிப்பிட்ட அறிக்கையில் கூறியது போல தமிழ்நாட்டில் ஊழல் நிறைந்த ஆட்சி தான் உள்ளது.  ஆனால் இந்தியாவில் மதத்தினை வைத்து அரசியல் இல்லை.  என்னுடைய உழைப்பு முதலமைச்சர் ஆகவேண்டும் என்று எண்ணம் இல்லை.   விரைவில் அமர வேண்டிய இடத்தில் அமருவேன்.

சாதி,மத வேறுபாடின்றி கட்சியில் வாய்ப்பு வழங்குவேன்.  கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளியாகும்.   மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் அமைச்சர்கள் சிறைக்கு சென்றதுதான் திமுகவின் செயல்பாடு.  நான் செய்யும் சாதனைகளும், சேவைகளும் ஊடகங்களுக்கு தெரியாது, யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

இதையும் படியுங்கள்:  அதிமுகவின் டம்மி பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் – ஓ.பி.எஸ். பேச்சு!

அரசு யோசிக்கும் திட்டங்களை அரசுக்கு முன்னே நான் செய்துள்ளேன்.  மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை விட அதிகமாக உழைத்தவன் சரத்குமார்.  கலைஞர் ஆட்சியில் இருந்தபோது அவரிடம் கேட்டிருந்தால் 25 தொகுதிகளை என்னிடம் கொடுத்திருப்பார்.
நான் உண்மையான மக்களின் தலைவர் என்பதை மக்கள் விரைவில் புரிந்து
கொள்வார்கள்.  பிரதமர் மோடியை புகழ்வதற்கு பல காரணங்கள் உள்ளன.

வெளிநாடுகளில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளது.  இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளதற்கு காரணம் பிரதமர் மோடி மட்டுமே.  எல்லா இடங்களிலும் இந்தியாவின் பெயர் உயர்ந்ததற்கு காரணம் பிரதமர் மோடி மட்டுமே.  வெளிநாடுகளில் இந்து கோயில்கள் கட்டுவது என்பது சாத்தியமற்ற ஒன்று ஆனால் தற்போது அது நடைபெறுகிறது.  அதற்கு பிரதமர் மோடிதான் காரணம்.

எல்லா இடங்களிலும் பிரச்னை உள்ளது.  எல்லாவற்றிற்கும் பிரதமரை குறை கூற
முடியாது.  முந்தைய ஆண்டுகளை விட தற்போதைய ஆண்டில் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது.  ஆளுனரோடு கலந்துகொண்டு ஒற்றுமையான முறையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்.  இந்தியா கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டே வருகிறது.  இந்தியா கூட்டணி உறுதியான கூட்டணி இல்லை.”

இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading