அமமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் பிப். 25ஆம் தேதி அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகி கடந்த…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகி கடந்த 9ஆம் தேதி சென்னை வந்தார். தற்போது தியாகராய நகரில் உள்ள இளவரசி வீட்டில் சசிகலா ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25ஆம் தேதி காலை 9 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவித்துள்ளார்.

கழகத் துணை தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில், காணொலி வாயிலாக பத்து இடங்களை இணைத்து நடைபெறும் இந்தக் கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அழைப்பிதழுடன் கலந்து கொள்ளுமாறு டிடிவி. தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.