தேசிய அளவில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதற்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக பதில் அளித்தார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 65 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை தாண்டி இந்திய அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனை அடுத்து, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் தீவிரமாக எழுந்துள்ளன.
ஆனாலும், தற்போது மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய சூழல் எழவில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். அதே சமயம் தமிழ்நாட்டை தாண்டி நாடு முழுவதும் மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்கிற மிக முக்கியமான கோரிக்கையை விசிக தலைவர் திருமாவளவன் முன்வைத்தார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது பேசிய திருமாவளவன்,








