முக்கியச் செய்திகள் தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பார்- அமைச்சர் மூர்த்தி

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்காலை  அமைச்சர் மூர்த்தி நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்று முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அலங்கநல்லூ் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளது. இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் வழங்கப்படும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு பரிசாக வழங்கப்படும் எனவும், காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்றார். அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியை உதயநிதிஸ்டாலின் தொடங்கிவைப்பார் என்றார்.

தொடர்ந்து காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை குறித்து கால்நடை மருத்துவர்களிடம் ஆலோசித்த அமைச்சர் மூர்த்தி தகுதியான காளைகளுக்கு சான்றிதழ் வழங்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“ஜெய் பீம்” விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை; நடிகர் சூரி

Halley Karthik

தக்காளி வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?

G SaravanaKumar

ஈரோடு கிழக்கு: வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு – ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி

Web Editor