அதிமுகவை ஓபிஎஸ் கைப்பற்றிவிட்டார்: நாஞ்சில் சம்பத்

அதிமுகவை ஓபிஎஸ் கைப்பற்றிவிட்டார் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கடந்த 2018ல் தினகரன் அணி சார்பில் நடைபெற்ற பொதுக்குழுவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசிய போது அப்போதைய முதல்வர் எடப்பாடி…

அதிமுகவை ஓபிஎஸ் கைப்பற்றிவிட்டார் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கடந்த 2018ல் தினகரன் அணி சார்பில் நடைபெற்ற பொதுக்குழுவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசிய போது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நாஞ்சில் சம்பத் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், “இந்த வழக்கை ரத்து செய்ய அரசாணை பிறப்பிக்க முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளேன். எடப்பாடி பழனிசாமியின் பண அரசியலுக்கு உயர்நீதிமன்றம் முடிவுகட்டியுள்ளது. பணத்தை வைத்து ஒன்றைரை கோடி தொண்டர்களை கொண்ட கட்சியை கைப்பற்ற முயன்ற எடப்பாடிக்கு உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது” என்றார்.

 

எடப்பாடி பழனிசாமி ஆசையில் மண் விழுந்துவிட்டதாக தெரிவித்த நாஞ்சில் சம்பத், “அதிமுகவை ஓபிஎஸ் கைப்பற்றி விட்டார். பணத்தை வைத்து தொண்டர்களை வாங்க நினைத்த எடப்பாடி பழனிசாமி அரசியலில் அனாதை ஆக்கப்படுவார். சசிகலா பிறந்தநாளில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அவருக்கு நம்பிக்கை அளித்து இருக்கும்” எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.