32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு  தடை விதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை
ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி
பழனிச்சாமியை நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து
ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி
நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வந்தன. இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏற்கனவே இது தொடர்பான வழக்கு மார்ச் 17 ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு  விசாரணை நடந்து ஏப்ரல் 11 ஒத்திவைக்கப்பட்ட பின்  பொது செயலாளர் தேர்தலை நடத்த என்ன அவசியம்? என்றும் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அவசர வழக்காக ஏன் பதிவு செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள் : தகுதி நீக்கம் எதிரொலி – அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்

தேர்தல் நடைமுறைகள் தொடரலாம். ஆனால் முடிவுகள் வெளியிடக் கூடாது என்றும் மார்ச் 22 விசாரணை நடைபெறும் என்றும், மார்ச் 24 அன்று இது தொடர்பாக  உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கடந்த மார்ச் 19ம் அன்று நீதிபதி தெரிவித்தார். மேலும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து வழக்கு விசாரணை ஏழு மணி நேரமாக நடைபெற்று வந்தது. ஓபிஎஸ் தரப்பு, அதிமுக , மனோஜ் பாண்டியன் மற்றும் ஜேசிடி பிரபாகர் தரப்பில் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும். யாருக்கும் ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படவில்லை. பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் தனக்கு என தனி கட்சியை நடத்தி வருகிறார். அவர் தங்களை நீக்கியுள்ளார். நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் என இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தகுதி நீக்கம் செய்ய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில் இதை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது எப்படி? வாதத்திற்காக மட்டுமே பொதுக்குழுவுக்கு அதிகாரம் என எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டு நிபந்தனைகள் விதித்து பொது செயலாளர் தேர்தல் நடத்துவது போட்டியே இல்லாமல் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என ஓ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். இதனையடுத்து  அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க கோரியும், நிர்வாகிகள் நியமனத்தை ரத்து செய்யக்கோரியும் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்  தற்போதைய வழக்குகளில் தன்னையும் புதிதாக சேர்க்க கோரினார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நாலை தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணியளவில் தீர்ப்பை வழங்குகிறார் உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு. முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாவதால் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading