வரும் ஜூன் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும், அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் பொதுக்குழு என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பொதுக்குழுவில் உட்கட்சி விவகாரம், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளது. அதேபோல பெட்ரோல் விலை, சட்டம் – ஒழுங்கு என தமிழ்நாடு அரசுக்கு எதிராக தீர்மானங்களும் நிறைவேற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா அதிமுகவில் சேர்வதில் உறுதியாக உள்ள நிலையில், அதுபற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.