எம்ஜிஆர்க்கு பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் விஜயகாந்த் மட்டுமே -பிரேமலதா விஜயகாந்த்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கொடுங்கையூரில் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிகவின் கழகப் பொருளாளர் பிரேமலதா…

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூரில் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிகவின் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், ’மழைக்காலங்களில் தமிழக அரசு தங்களுடைய பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். கட்சித் தொண்டர்கள் தான் எங்களுடைய கட்சியின் ஆணிவேர்’ என்று கூறினார்.

சென்னையில் கடுமையான வெள்ளத்தையும் நாம் பார்த்தவர்கள் தான் இரவில் மலை பெய்கிறது பகலில் மழை இல்லை இருக்கிற உண்மைதான் நாம் சொல்ல வேண்டும் ஏதோ ஒன்று சொல்ல வேண்டும் என்று நோக்கத்தோடு சொல்லக்கூடாது தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.

மேலும், அவர்களுக்கு பாராட்டு புகார்கள் வந்தால் உடனடியாக ராட்சத இன்ஜினை வைத்து தண்ணீர் அப்புறப்படுத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மழைநீர் வடிகால்வாய்கள் பண்டிகைகளை விரைந்து முடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சீர்காழியில் 122 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய கனமழை பொழிந்துள்ளது.

அங்கெல்லாம் விவசாயம் சார்ந்த பூமி அங்கெல்லாம் நெல் விவசாயத்தை செய்யக்கூடியவர்கள் நெற்பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி இருக்கின்றது நாம் பார்த்துள்ளோம் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது நாளை வெளிவருகிறது பாதிக்கப்பட்ட இடங்களை கட்சி தொண்டர்கள் சம்பவ இடத்தைச் சென்று தம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் எனவும் கூறினார்.

மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை நீர் நிற்பதாக புகார்கள் வந்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.