75 நாட்களுக்கு பிறகு நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீன்பிடி தடைகாலம் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 75 நாட்களாக நாகை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இந்நிலையில், இரு மாவட்ட மீனவர்களும் 75 நாட்களுக்கு பிறகு கடலில் மீன்பிடிக்க சென்றனர். அதேநேரம், டீசல் மானியம் போதுமானதாக இல்லை என்பதால் டீசல் விலையை உயர்வை குறைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்ய அரசு வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.







