நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம்- அரசாணை வெளியீடு

மேயர், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான அதிகாரங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னை மாநகராட்சியை தவிர்த்து நகராட்சி, மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பொது…

மேயர், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான அதிகாரங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னை மாநகராட்சியை தவிர்த்து நகராட்சி, மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பொது செலவினங்கள், மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்படும் நிதிகளை பயன்படுத்துவதற்கான அதிகாரங்கள் ஆகியவற்றை உயர்த்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி 35 லட்ச ரூபாய் வரையிலான பணிகளுக்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி வந்த நிலையில், தற்போது ஒரு கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நகராட்சிகளில் 10 கோடி ரூபாய் வரையிலான
பணிகளுக்கு இயக்குனரே அனுமதி வழங்கலாம் எனவும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமான
மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்தும் போது அரசின் அனுமதி பெற வேண்டும் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல பத்துலட்ச ரூபாய் வரையிலான திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 20 லட்சம் ரூபாய் வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்கிவந்த மாநகராட்சி மேயர்கள் இனி 50 லட்சம் ரூபாய் வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு இயக்குனரே அனுமதி வழங்கலாம் எனவும் அதற்கு அதிகமான தொகை கொண்ட திட்டங்களுக்கு அரசின் அனுமதி பெற வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.