ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக போட்டியிடுவது குறித்து நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து திமுக-காங்கிரஸ் கூட்டணியும் தனது முடிவை இறுதி செய்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்தது.இந்த நிலையில் அதிமுக -தாமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவே போட்டியிடும் என்று ஜி கே வாசன் அறிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக , அதிமுக என தங்களது கூட்டனியின் சார்பில் தேர்தலை சந்திப்பது தொடர்பாக முனைப்பு காட்டி வரும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறார். சென்னையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி நிர்வாகிகளுடன் இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.