தென்காசி மாவட்டத்தில் வரும் 31ஆம் தேதி ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடித்தபசு திருநாள் 31.07.2023 திங்கள் கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 19.08.2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- பி. ஜேம்ஸ் லிசா