கேரளத்தைச் சேர்ந்த இந்தியருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரை மீட்பதற்காக நிவாரண நிதி அளிப்பதற்கு ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோடு, ஃபெரோக் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் கடந்த 2006-ம் ஆண்டு தனது 20வது வயதில் சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு குடும்பத்தினரிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். அதே ஆண்டில் அக்குடும்பத்தினருடன், அப்துல் ரஹீமுக்கு பிரச்னை ஏற்பட்டது.








