உ.பியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கைது!

உத்தர பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை அடையாளம் தெரியாத 3 நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் பாபானி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனக்கு…

உத்தர பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை அடையாளம் தெரியாத 3 நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தர பிரதேசம் பாபானி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடன் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலில் பூஜைகள் முடிந்ததும் இருவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது காட்டில் மரக்கட்டையை வெட்டி கொண்டிருந்த 3 பேர் அவர்கள் வருவதை பார்த்துள்ளனர். பின்னர், அவர்கள் வந்த வாகனத்தை வழி நிறுத்தி இளைஞரை தாக்கிவிட்டு அந்த பெண்ணை இழுத்து சென்றனர்.


காட்டின் மையப்பகுதிக்கு இழுத்து சென்ற பிறகு 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே அந்த இளைஞர் இச்சம்பவம் குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.