30 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா Fact Check Stories

‘சன்னி முஸ்லிம்கள் சங்கம்’ பெயரில் வைரல் ஆன போலி கடிதம்!

This News Fact Checked by THE QUINT

நாடாளுமன்ற வாக்குப்பதிவில் பங்கேற்க துபாய் வாழ் இந்திய இஸ்லாமியர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்ற போலி கடிதம் இணையத்தில் வைரலானது THE QUINT இணையதள பக்கத்தின் உண்மை செய்தி சரிபார்க்கும் குழுவின் ஆய்வு வாயிலாக அம்பலமாகியுள்ளது. 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்நிலையில், துபாயில் வசிக்கும் சன்னிப்பிரிவு இந்திய இஸ்லாமியர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கச் செல்ல விமான டிக்கெட்டுக்கு ஆகும் செலவு முழுமையாக கொடுக்கப்படும் என்றும், சர்வாதிகாரத்தை ஒழித்து, காங்கிரஸ் வெற்றியடைய அனைத்து சன்னிப் பிரிவு இஸ்லாமியர்களும் வாக்களிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்ட சன்னி முஸ்லிம்கள் சங்கம் பெயரிலான கடிதம் ஒன்று இணையத்தில் வைரல் ஆனது.

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இன்று இந்த கடிதம் வைரல் ஆன நிலையில், இது உண்மையான கடிதமா என THE QUINT இணையதள உண்மை செய்தி சரிபார்க்கும் குழுவின் வாயிலாக ஆய்வு நடத்தப்பட்டது.

THE QUINT இணையதள ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:

இது உண்மையா?:

  • குறிப்பிடப்பட்ட கடிதம் போலியானது, ஏனெனில் அந்த பெயரின் எந்த அமைப்பையும் அல்லது கடிதத்தின் உள்ளடக்கங்களை ஆதரிக்க எந்த செய்தி அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
  • மேலும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி மற்றும் தொடர்பு விவரங்களும் போலியானது என தெரியவந்துள்ளது.
  • நாங்கள் அமைப்பின் பெயரையும் தேடினோம், ஆனால் துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) ஆகிய இடங்களில் எதுவும் கிடைக்கவில்லை.
  • மேலும் லெட்டர்ஹெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை (#2-11வது தெரு காலித் பின் வலீத் சாலை பிளாட் எண். உம்மு ஹுரைர் ஒன் துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) பார்த்தோம் .
  • முடிவுகள் அந்த முகவரியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள துபாயில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரகத்தை எங்களுக்குக் காட்டியது.
  • இது தவிர, பின்வரும் பெயர்களில் பட்டியலிடப்பட்டுள்ள மூன்று எண்களைத் தொடர்பு கொண்டோம்: முகமது ஃபயாஸ் (ஹூப்ளிக்கு), இப்ராஹிம் பட்கல் (கார்வார்க்கு) மற்றும் ஃபிரோஸ் ஹிதாதுல்லா (ஷிமோகாவுக்கு).
  • மூவரில், இரண்டு பேர் The Quint க்கு பதிலளித்து , அந்த அமைப்பைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் இல்லை என்றும் தெளிவுபடுத்தினர்.
  • இதன் வாயிலாக கர்நாடகாவில் வாக்குப்பதிவு நேரத்தில், கூறப்பட்ட கடிதம் போலியானது என்பது உறுதியானது.

Note: This story was originally published by ‘THE QUINT’and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective – 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading