மதுபோதையில் ரயில் நிலையம் என நினைத்து ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து திருச்சி செல்ல பிளாட்பார்ம் எங்கே என கேட்டு அலப்பறை செய்த நபரை போலீசார் அப்புறப்படுத்தினர்.
நாகை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி, நாகூர் சுற்றுலா தளத்திற்கு வந்த பயணி ஒருவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகேயுள்ள வாஞ்சூரில் மது அருந்தியுள்ளார்.
இவர் போதையில் பர்ஸ், உடைகள், பைகளை தவறவிட்டுள்ளார். இவர் அடுத்து என செய்வதிறயாமல் திருச்சிக்கு ரயில் ஏறி அங்கிருந்து திண்டுக்கல் செல்ல திட்டமிட்டு நாகை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் போதையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து ரயில் நிலையம் என நினைத்து திருச்சி செல்ல வேண்டும் பிளாட்பார்ம் எங்கே என கேட்டு அலப்பறை செய்துள்ளார். பின்னர் அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தினர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.