தமிழ்நாட்டில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உடனடியாக மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அமைச்சர் செந்தில் பாலாஜியால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அந்த அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 அன்று அரசாணை எண்.140, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.
மேற்படி, அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.6.2023 முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு டாஸ்மாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








