சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட வழித்தடம் 5-ல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக ரூ.1817.54 கோடியில் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
“சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 5-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1817.54 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் JICA நிதியுதவியின் ஒரு பகுதியாகும். இதற்கான ஏற்பு கடிதம் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு செப்டம்பர் 11-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 5-ல் கொளத்தூர் சந்திப்பு மெட்ரோ, சீனிவாச நகர் மெட்ரோ, வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பேருந்து நிலைய முனையம் மெட்ரோ மற்றும் வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை மெட்ரோ என ஐந்து சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கு மற்றும் கொளத்தூர் சந்திப்பு முதல் வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை வரை இரட்டை துளையிடப்பட்ட சுரங்கங்கள், U-பிரிவு கொண்ட பாதைகள் மற்றும் சாய்வு பாதைகள் போன்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
இதையும் படியுங்கள் : புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் – உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம் கட்டம் 2-ல் மூன்று வழத்தடங்களில் 116.1 கி.மீ நீளத்தில் கட்டுமானம் மற்றும் தடம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் 100% நிறைவு பெற்றுள்ளது”. இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







