தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வேகமாக உயர்ந்த கொரோனா பரவல், முழு ஊரடங்கு மற்றும் தீவிர நடவடிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இன்னும் முழுமையாக நீக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தொற்று குறைந்து வருவது மக்களிடையே மகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 428 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,652 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 21 ஆயிரத்து 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 3 ஆயிரத்து 104 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 56 ஆயிரத்து 165 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 36 பேர் உயிரிழந் துள்ளனர். இதையடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந் துள்ளனர். ஈரோட்டில் 193 பேருக்கும் சேலத்தில் 170 பேருக்கும் கோவையில் 290 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.