19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 3 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழா சீனாவின் ஹாங்சோவ் நகரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொண்டு ஆசிய போட்டிகளை தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தேசிய கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றனர். அவர்களை தொடர்ந்து இந்திய வீரர்கள் அணி வகுத்து சென்றனர்.
நேற்று கோலாகலமாக தொடங்கிய இந்த போட்டிகளில் இந்தியா இதுவரை 3 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- மகளிர் 10m துப்பாக்கிச் சுடுதல்: ஆஷி சவுக்ஷி, மெகுலி கோஷ் ரமிதா ஆகிய வீராங்கனைகள் அடங்கிய குழு வெள்ளி பதக்கம் வென்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்கப் பட்டியல் கணக்கை துவக்கி வைத்தது.
- ஆடவர் லகு ரகு டபுல்ஸ் ஸ்கல்ஸ்: வெள்ளி.
- ஆடவர் துடுப்புப் படகு செலுத்துதல் (2 வீரர்கள் கொண்ட போட்டி): வெண்கலம்.
- ஆடவர் துடுப்புப் படகு செலுத்துதல் (8 வீரர்கள் கொண்ட குழு நிகழ்வு): வெள்ளி.
- மகளிர் 10m துப்பாக்கிச் சுடுதல் (தனிநபர்): வெண்கலம்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில், 20 ஓவர் மகளிர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 51 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அண் 8.2 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.