39 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள் குற்றம்

பட்டப்பகலில் 17-வயது சிறுவன் வெட்டிக் கொலை: போலீஸ் தீவிர விசாரணை

சென்னை தண்டையார்பேட்டையில் பட்டப்பகலில் 17 வயது சிறுவனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்டையார்பேட்டை திலகர் நகர் குடியிருப்பு பகுதியில் சீனிவாசன் என்ற 17 வயது சிறுவனை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு முன்னதாக காலையில் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் பசுபதி என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கும் சிறுவன் சீனிவாசன் கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading