சென்னை தண்டையார்பேட்டையில் பட்டப்பகலில் 17 வயது சிறுவனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்டையார்பேட்டை திலகர் நகர் குடியிருப்பு பகுதியில் சீனிவாசன் என்ற 17 வயது சிறுவனை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு முன்னதாக காலையில் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் பசுபதி என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கும் சிறுவன் சீனிவாசன் கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.