வத்தலகுண்டு அருகே நடுரோட்டில் அரசு பேருந்து பழுதாகி அருகில் இருந்த புளிய மரத்தில் மோதிய விபத்தில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தெப்பத்துபட்டியில் இருந்து அரசு பேருந்து ஒன்று வத்தலகுண்டு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, அரசு நகர பேருந்து ராஜா நகர் பகுதியில் ஸ்டேரிங் பழுது ஏற்பட்டு, சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதில் விருவீடை சேர்ந்த அனுராதா, தமிழரசி, ஜெயபாரதி, பாண்டி லட்சுமி, சின்னுபட்டியை சேர்ந்த பழனிச்சாமி, பாப்பம்மாள், வடக்கு வளையப்பட்டியைச் சேர்ந்த ஆரம்மாள் உள்ளிட்ட 10-பேர் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 4-பேர், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்தலகுண்டு காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வத்தலகுண்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகள் விபத்து ஏற்ட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
ம. ஶ்ரீ மரகதம்