மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ஒதுக்கீடு – துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை

புதுச்சேரியிலும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார். புதுச்சேரியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்…

புதுச்சேரியிலும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார்.

புதுச்சேரியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், புதுச்சேரியில் 10% வழங்க துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

புதுச்சேரி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் இருந்தே இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.