இருசக்கர வாகன விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்ததால் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் ஒன்றிணைந்து ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து இரு சக்கர வாகன பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிறுவள்ளி குப்பத்தை சார்ந்த புருஷோத் என்ற இளைஞர், இருசக்கர வாகன விபத்தில் கடந்த 1 ஆம் தேதி மேல்மருவத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் . சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 6ஆம் தேதி உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் கண்தானம் செய்து இருந்ததால், அவருடைய கண்கள் தானமாக பெறப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் உயிரிழந்த இளைஞரின் முப்பதாவது நினைவு நாளை முன்னிட்டு அவருடைய நண்பர்கள் கிராமமக்கள் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் விக்கிரமராஜாவுடன் இணைந்து ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து உறுதி மொழி ஏற்று விழிப்புணர்வு பேரணியாக சென்றனர்.
Related video – https://www.instagram.com/p/Ci7HTjvvSe9/?igshid=ZDZjYjU5YmM=
விக்கிரவாண்டி டோல்கேட்டில் ஆரம்பிக்கபட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி பனையபுரம் தொரவி, மதுரப்பாக்கம் வழியாக சிறுவள்ளி குப்பம் சென்றடைந்தனர். வழி நெடுகிலும் செல்போன் பேசி கொண்டு வாகனம் இயக்கக் கூடாது என்றும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டகூடாது என விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி பேரணியாக சென்றனர். மேலும் தங்கள் கிராம இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகமாட்டோம் என உறுதி மொழி ஏற்றனர்.