சென்னையில் இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோபால் நகரை சேர்ந்தவர் 23 வயதான அஜித்குமார். இவர் அப்பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அவரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பின் தொடர்ந்துள்ளனர். அப்போது, திடீரென மர்ம கும்பல் கத்தியை எடுத்து அஜீத்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் திருவிக நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் காதல் விவகாரமா அல்லது வேறு ஏதேனும் முன்பகையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.







