ஆன்லைன் சூதாட்டத்தால் நெல்லை இளைஞருக்கு நடந்த சோகம்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் சிவன்ராஜ். பட்டதாரிதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கியுள்ளார். அவ்வப்போது ஆன்லைன்…

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் சிவன்ராஜ். பட்டதாரிதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கியுள்ளார்.

அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விளையாடி சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய தொகையை வைத்து விளையாடிதாக கூறப்படுகிறது. அதில் சிவன்ராஜ் தன்னுடைய மொத்த தொகையும் இழந்துள்ளதாக தெரிகிறது.

பின்னர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் விட்ட பணத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி சிவன்ராஜ் விளையாடியதாக  தெரிகிறது. அதிலும் சிவன்ராஜ் விளையாண்ட விளையாட்டிலும் தோல்வியுற்று தான் கடன் வாங்கிய பணத்தையும் இழந்துள்ளார்.இதுவரை சுமார் 15 லட்சத்திற்கு மேல் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மணமுடைந்து தனது ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று கூல்டிரிங்சில் பூச்சிக்கொல்லி மருந்தை  கலந்து குடித்துள்ளார்.

மயங்கிய நிலையில் இருந்த சிவன்ராஜ்ஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த சிவன்ராஜ்  குடும்பத்தில் ஒரு அக்கா ஒரு தங்கை உள்ளனர். இவர் தான் குடும்பத்தில் உள்ள ஆண்மகன் ஆவார்.

செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் இறந்த சம்பவம் பணகுடி அதன் சுற்றுவட்டார பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.