32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அத்தை மகள்கள் பிடிவாதம்: ஒரே நேரத்தில் 2 பேரை மணந்த இளைஞர்!

அவரைத்தான் திருமணம் செய்வேன்’ என அத்தை மகள்கள் பிடிவாதம் பிடித்ததால், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன். ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் அர்ஜுன், தனது அத்தை மகள்களான சுரேகா மற்றும் உஷாராணியை ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை தொடர்பு கொண்டு காதல் வலை வீசியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அத்தையின் இரண்டு மகள்களுமே காதல் வயப்பட்டதைத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தாருக்கும் விஷயம் தெரியவந்தது. குடும்பத்தினர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அத்தை மகள்கள் இரண்டு பேரை காதலித்து ஒரே நேரத்தில் கரம் பிடித்த இளைஞர் | 90's kid married 2 girls

இதில் இரண்டு அத்தை மகள்களும் பிடிவாதமாக அர்ஜுனனை மணக்க ஆசைப்பட்டனர். இதனால், ஆதிவாசிகளான அவர்களது பாரம்பரியமான வாழ்க்கை முறையை மாற்றி முதல் முறையாக, இரு பெண்களையும் ஒரே மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து இவர்களது திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இரு மணமகளுக்கு தாலி கட்டிய அவர், தற்போது மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். மணமகள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரு மணமகளை கை பிடித்தது. அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
……………..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading