விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் 21 வயதான மாரிமுத்து. இளைஞர் மாரிமுத்து கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாத நிலையில் கடந்த இரண்டு தினங்கள் மட்டுமே வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலை இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பின்பு நண்பர்களுடன் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள கிணற்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மாரிமுத்து கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறையினர் மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







