எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் ட்வீட் செய்துள்ளார்.
பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ‘”திமுக தனது கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும்; பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் குறைந்தபட்ச சமரசத்தைக் கூட திமுக செய்துகொள்ளாது ; டெல்லிக்குக் காவடி தூக்கவா செல்கிறேன்?கை கட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்?கலைஞர் பிள்ளை நான்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும் என்பதும் அறிவோம்’ எனத் தெரிவித்துள்ள அவர், ஊழலற்ற, நேர்மையான, தேசிய சிந்தனை கொண்ட பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ள திமுக வால் இயலாது என்பதும் அறிவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
"திமுக தனது கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும். பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் குறைந்தபட்ச சமரசத்தைக் கூட திமுக செய்துகொள்ளாது. டெல்லிக்கு காவடி தூக்கவா செல்கிறேன்?கை கட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்?கலைஞர் பிள்ளை நான்" – தி மு க தலைவர் @mkstalin
எங்கும் ஊழல், (1.3)
— Narayanan Thirupathy (@narayanantbjp) August 16, 2022
மேலும், தமிழினத்தைக் கொன்று குவிக்க உதவிய போது டெல்லி காங்கிரசிடம் திமுக, கை கட்டி, வாய் பொத்தி காவடி தூக்கியது எப்படி என்பதும் தெரியும் எனத் தெரிவித்துள்ள அவர், இந்திரா காந்தி புடவை கட்டிய ஹிட்லர் என்று கூறி விட்டு, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன் நீங்கள் என்பதும் தெரியும் என அவர் அந்த ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
வாய் பொத்தி காவடி தூக்கியது எப்படி என்பதும் தெரியும். இந்திரா காந்தி அவர்களை புடவை கட்டிய ஹிட்லர் என்று கூறி விட்டு, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன் நீங்கள் என்பதும் தெரியும்.
நாராயணன் திருப்பதி.(3/3)
— Narayanan Thirupathy (@narayanantbjp) August 16, 2022








