பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி – சென்னை பட்ஜெட் 2026-27ல் அறிவிப்பு…….!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் யோகா மற்றும் தற்காப்புக்கலைப் பயிற்சி அளிக்கப்படும் என்று சென்னை பட்ஜெட் 2026-27ல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் துறை வாரியாக 90 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்ப்போம்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 பூங்காக்களில் குழந்தைகளுக்கான சிறப்பு உபகரணங்களுடன் Inclusive Parks ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

சென்னை மாநகராட்சியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 விளையாட்டுத் திடல்கள் மேம்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சியில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக 200 பூங்காக்ககளில் அறிவியல் பூர்வமாக தற்காலத்திற்கு ஏற்ற வகையில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரூ.100 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஜார்ஜ்டவுன், கத்திவாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, இராமாபுரம், ஸ்ரீராம் நகர், நங்கநல்லூர், என்.ஜி.ஓ காலனி ஆதம்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் மாநகர பேருந்து பணிமனைகளை பொது தனியார் கூட்டாண்மையுடன் மறுவடிவமைப்பு செய்யப்படும்.

கடற்கரைகள், MRTS, மெட்ரோ நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் புறநகர் இரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நடைபாதை & மிதிவண்டிப் பாதை (Non-Motorised Transport Corridor) 25 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்படும்.

சென்னை உயர்நீதிமன்றம் முதல் செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம் வரை ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் வண்ணமயமான அலங்கார விளக்குகளுடன் பாரம்பரிய வழித்தடம் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், அடையாறு, பெசன்ட் நகர் போன்ற இடங்களில் மின்வாகன மின்னேற்ற (Electric Vehicle Charging Stations) அமைக்கப்படும்.

வெள்ள அபாயம், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை திட்டமிட Urban Data Observatory Asset Management Software Digital Twin செயல்படுத்தப்படும்.

மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை கயிறு வழித்தடம் (Ropeway Car) பொது-தனியார் பங்களிப்பு (PPP) முறையில் அமைக்கப்படும்.

ரூ.9 கோடி மதிப்பீட்டில் புதியதாக 6 இடங்களில் இரவு காப்பகங்கள் அமைக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் யோகா மற்றும் தற்காப்புக்கலைப் பயிற்சி அளிக்கப்படும்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.