FIFA கால்பந்து உலகக் கோப்பையில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதும் இறுதிப் போட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரமாண்ட திரையில் போட்டி ஒளிபரப்பப்படுகிறது.
கத்தாரில் நடைபெற்று வரும் உலககோப்பை கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் தற்போது நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2 முறை சாம்பியன்களான அர்ஜென்டினா 6-ஆவது முறையாகவும், பிரான்ஸ் 4-ஆவது முறையாகவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த முறை கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்றைய போட்டியில் வென்று உலகக் கோப்பையை தன்வசமாக்கும் அணிக்கு ரூ.342 கோடி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
உலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவராக திகழும் அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி, இந்த கத்தார் உலகக் கோப்பை தொடருடன் தனது கால்பந்து பயணத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளதால், அர்ஜென்டினா அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என ஏராளமான ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே நேரம் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், இந்த தொடரிலும் வலிமையாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறி உள்ளதால், அர்ஜென்டினா அணிக்கு இன்றைய போட்டி சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இந்நிலையில் இந்த இறுதிப் போட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரமாண்ட திரையில் போட்டி ஒளிபரப்பப்படுகிறது. ஏராளமான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் புதுச்சேரியில் இருப்பதால் கடற்கரை சாலையில் பிரம்மாண்ட திரையில் போட்டி ஒளிபரப்பப்படுகிறது.
இந்த ஏற்பாடுகளை பிரெஞ்சு தூதரகம் மற்றும் புதுச்சேரி சுற்றுலாத்துறை இதற்கான செய்துள்ளது. இந்த போட்டியை பிரமாண்ட திரையில் காண 1000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.
அத்துடன், புதுச்சேரிக்கான பிரஞ்சு துணை தூதர் லிசே டல்போட் பரே பொதுமக்களுடன் போட்டியை காண்கிறார்.