எகிப்தில் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில் இஸ்ரேல் போர் எதிரொலியாக இந்தியா விலகியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதன்பின்னர் பதிலடியாக இஸ்ரேலும் பதிலுக்கு நடத்தியதில் இரண்டு நாடுகளிலும் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா். 9000க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.
இதன் பின்னர் இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதல் நடத்தில் காஸா பகுதியில் மின்சாரம், தண்ணீர் மற்றும் எல்லை ஆகியவற்றை தடை செய்தது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல போர் பிரகடணம் அறிவித்துள்ள இஸ்ரேலுக்கும் கண்டனங்கள் வலுத்து வலுகிறது.
ரஷ்யா, ஈரான், சவூதி உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 8வது நாளாக தொடா்ந்து வருகிறது.
இந்த நிலையில் எகிப்தில் நடக்கும் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது. உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் இன்று முதல் வரும் 23-ம்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் இருந்து 39 வீரர்கள் கலந்து கொள்வதாக இருந்தது.
இப்போட்டி நடக்கும் நகரம், இஸ்ரேல் எல்லையில் இருந்து 400 கிலோமீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ளதால், பாதுகாப்பு கருதி, போட்டியில் இருந்து இந்தியா விலகியது.







