மகளிர் பிரீமியர் லீக் தொடரில் உ.பி. வாரியர்ஸ் அணி, பெங்களூரு அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் டி20 போட்டியின் நேற்றைய ஆட்டம் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, உ.பி. அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
அதிரடியாக ஆடிய எல்லிஸ் பெர்ரி 39 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 52 குவித்து ஆறுதல் அளித்தார். சோபி டிவைன் 36 ரன்கள், ஸ்ரேயா பாட்டீல் 15 ரன்கள் அடித்தனர். 19.3 ஓவர்களில் பெங்களூரு அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. உ.பி. வாரியர்ஸ் தரப்பில் சோபி எக்லஸ்டோன் 4 விக்கெட், தீப்தி சர்மா 3 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையும் படியுங்கள்: பார்டர் கவாஸ்கர் தொடர்; 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 36 ரன்கள் சேர்ப்பு
இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணியின் தேவிகா வைத்யா – அலிசா ஹீலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக விளையாடிய அலிசா ஹீலி 96 ரன்களும், தேவிகா 36 ரன்களும் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம், 13 ஓவர்களிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்கு வழிவகுந்த அலிசா ஹீலி சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.
– யாழன்







