பாலியல்ரீதியாக தொல்லை கொடுப்பதாக ரவீந்திரநாத் எம்பி மீது இளம்பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்து தனது பதவி மற்றும் அதிகாரத்தை வைத்து மிரட்டி வருவதாக ரவீந்திரநாத் எம்பி மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் பெண் புகார் அளித்துள்ளார். சென்னை அருகே ஏகாடூர் பகுதியில் வசித்து வருபவர்…

பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்து தனது பதவி மற்றும் அதிகாரத்தை வைத்து மிரட்டி வருவதாக ரவீந்திரநாத் எம்பி மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் பெண் புகார் அளித்துள்ளார்.

சென்னை அருகே ஏகாடூர் பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி தேவி. இவர் ஓபிஎஸ்
மகனும் மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத், தனக்கு கொலை மிரட்டல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறி புகார் அளிக்க வந்தார்.

அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு தனது தோழியின் திருமணத்தில் ஓபிஎஸ் மகள் கவிதா, அவரது சகோதரர் ரவீந்திரநாத், மற்றும் அவரது மனைவி ஆனந்தி ஆகியோருடன் நட்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு தனக்கு விவாகரத்து ஆனதை அறிந்த ரவீந்திரநாத் கடந்த அக்டோபர் முதல் தனது நண்பர் முருகன் என்பவர் மூலமாக தனக்கு தொந்தரவு அளித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், அவர் தனது வாட்ஸ் அப் மூலமாக மிக அநாகரீகமான வார்த்தைகளில் தன்னை வர்ணிப்பதாகவும் கூறினார்.

அவரது விருப்பத்திற்கும் இணங்காததால் தன்னை குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருவதாகவும், இது குறித்து ஏற்கனவே தாம்பரம் ஆணையரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தன்னிடம் போதுமான ஆதாரம் இருந்தும் இதுவரை அரசியல் செல்வாக்கு உள்ளதால் எந்த
நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். இதனால் டிஜிபியை சந்தித்து புகார் அளிக்க வந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் டிஜிபி அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால்
நாளை காலை எனது புகாரை அளிக்க உள்ளதாக காயத்ரி கூறினார்.

ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.