கணவரை பிரிந்து மீண்டும் காதலனை கரம் பிடித்த பீகார் பெண்!

பீகாரில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட, திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு கணவனைப் பிரிந்து தனது காதலனை கரம் பிடித்த பெண். பீகார் மாநிலத்தின் சுல்தான்காஞ்ச் பகுதியில் அனு குமாரி என்ற இளம்பெண் வசித்துவருகிறார்.…

பீகாரில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட, திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு கணவனைப் பிரிந்து தனது காதலனை கரம் பிடித்த பெண்.

பீகார் மாநிலத்தின் சுல்தான்காஞ்ச் பகுதியில் அனு குமாரி என்ற இளம்பெண் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆஷூ குமார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் காதல் அனு குமாரியின் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால் அவர்கள் அனுகுமாரியின் காதலுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் வேறு இடத்தில் அவருக்கு மணமகனை தேடியுள்ளனர்.

ஆனால் அனுகுமாரியோ ஆஷூ குமாரைத்தான் திருமணம் செய்வேன் எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் அனுகுமாரியை வீட்டிற்குள் ஒரு அறையில் அடைத்துவைத்து சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் கிரான்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு நபரை பார்த்து கட்டாய திருமணம் செய்துவைத்தனர். வேறு வழியில்லாமல் அறிமுகம் இல்லாத நபரைத் திருமணம் செய்துகொண்டு கடந்த 2 மாதங்களை நாட்களைக் கடத்தி வந்துள்ளார் அனுகுமாரி.

ஆனால் தனது காதலனின் நினைவுகளால் கணவனுடன் வாழ விருப்பமில்லை என்பதை குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டு ஆஷூ குமாரைச் சந்திக்க சென்றார் அனுகுமாரி. அனுகுமாரி மற்றும் ஆஷூ குமார் ஆகிய இருவரும் சுல்தான்காஞ்ச் ரயில்நிலையத்திலிருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் ஏறியுள்ளனர். பின்னர் ரயிலுக்கு உள்ளேயே கழிவறை முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் எதிர்ப்பை தாண்டி பெண் ஒருவர் தான் விரும்பிய காதலனையே கரம் பிடித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.