பெண் மருத்துவர் கொலை விவகாரம்: 7 ஆண்டுகள் சிறை தண்டனை சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

கேரளாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில், அதிகபட்ச 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  கேரள மாநிலம்…

கேரளாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில், அதிகபட்ச 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

கேரள மாநிலம் கொல்லத்தில் இளம் பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பணியாளர்களையும் பாதுகாக்க கோரிக்கை வலுத்து வருகின்றன. இந்த நிலையில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அரசு வேடிக்கை பார்க்காது என்று அண்மையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளாவில் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிபடுத்தவும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் 2012-யை திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி, குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு, அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் குறைந்த பட்சமாக 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.