தண்ணீர் தேடி வந்த 5 காட்டுயானைகள் ஏரியில் தஞ்சம் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் பெரிய ஏரியில் தண்ணீர் தேடி வந்த 5 காட்டுயானைகள் நீரில் குளியல் போட்டு கும்மாளமிடும் காட்சி அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியக்காரன்கொட்டாய் கிராமத்தில் உள்ள
ஜெர்த்தலாவ் பெரிய ஏரியில் தேன்கனிக்கோட்டை, சானமாவு உள்ளிட்ட பகுதிகளில்
இருந்து உணவு தேடி வந்த 3 காட்டு யானைகளும், 2 குட்டி யானைகளும் ஏரியில் தஞ்சம்
அடைந்தன.
பெரிய காட்டு யானைகளுடன் குட்டி யானைகள் ஏரியில் உள்ள நீரில் குளியல் போட்டு
கும்மாளமிடும் காட்சியை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்து
பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காட்டு
யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று வனத்துறையினர் ஈச்சம்பள்ளம் அருகே சுற்றி திரிந்த 20 வயது மக்னா யானையை பிடித்து ஆணைமலை முகாமிற்கு அனுப்பி வைத்த நிலையில் இன்று அதிகாலை மணியக்காரன்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் பெரிய ஏரியில் குட்டி யானை உட்பட 5 யானைகள் முகாமிட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
– யாழன்







