முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிகாலை முதல் சென்னையில் பரவலாக சாரல் மழை!

சென்னையில் அதிகாலை முதல் பல இடங்களில் பரவலாக மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து பிப்ரவரி 1ம் தேதி அன்று இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்த ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில், லேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் காலை முதல் பல இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“தலைவன் செல்வராகவன்” – ரசிகனின் ட்வீட் வைரல்!

Web Editor

சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது..!

Web Editor

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற கரன்சிகள் பறிமுதல்

Dinesh A