சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை திமுக தொடங்கியுள்ளது. இதனிடையே முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுடன் திமுக தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜவாஹிருல்லா, “திமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மமவுக்கு 5 இடங்களை கேட்டுள்ளோம். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறியுள்ளனர். இந்த முறையும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதிக தொகுதிகளை கேட்டுள்ளோம், முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.







