மகா கும்பபேளா தீ விபத்தின் போது கங்கா நதியில் இறங்கிய பக்தர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதா?

This News Fact Checked by ‘AajTak’ உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, பக்தர்கள் கங்கா நதியில் இறங்கியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை…

Was there a stampede caused by devotees entering the Ganga River during the Maha Kumbh Mela fire?

This News Fact Checked by ‘AajTak

உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, பக்தர்கள் கங்கா நதியில் இறங்கியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

பிரயாக்ராஜின் மகா கும்பமேளா பகுதியில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மகா கும்பமேளாவின் கங்கா நதி பகுதியில் நெரிசல் ஏற்பட்டது, அதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிர் தப்பினர் என்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

சமீபத்தில், பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பமேளா நடைபெறும் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கங்கா நதிப் பகுதியில் நெரிசல் ஏற்பட்டது, அதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிர் தப்பினர் என்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பெரும் கூட்டம் தண்ணீரில் நிற்பதை வீடியோவில் காணலாம். மக்கள் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக நிற்பதைக் காணலாம். இவர்களில் பலர் காவி உடை அணிந்துள்ளனர். மகா கும்பத்திற்கு முன் ராஜ ஸ்நானத்தின் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

வீடியோவைப் பகிரும்போது, ​​​​ஒரு ட்விட்டர் (எக்ஸ்) பயனர், “பிரேக்கிங் நியூஸ்…. கங்கா நதியில் கூட்ட நெரிசல்… 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீரில் மூழ்கி உயிர் தப்பினர்… யார் பொறுப்பு…? அரசாங்கம் எங்கே…?” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பிரயாக்ராஜ் மகா கும்பமேளா என்று கூறி பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.
இது ஆகஸ்ட் 2024 இல் பீகார் மாநிலம் பாகல்பூரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ என ஆஜ் தக் உண்மைச் சரிபார்ப்பு கண்டறிந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.