உத்தரபிரதேசம் மகா கும்பமேளாவில் 3 தலைகள் கொண்ட யானை காணப்பட்டதா?

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற உள்ள மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் மூன்று தலைகள் கொண்ட இந்த யானை காணப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.

Was a 3-headed elephant seen at the Maha Kumbh Mela in Uttar Pradesh?

This News Fact Checked by ‘AajTak

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற உள்ள மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் மூன்று தலைகள் கொண்ட இந்த யானை காணப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

ஜனவரி 13 முதல் தொடங்கும் மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளுக்கு மத்தியில், ஒரு தனித்துவமான யானையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த யானைக்கு 3 தலைகள் இருப்பது சிறப்பு. உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மூன்று தலைகள் கொண்ட இந்த யானை காணப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.

வீடியோவில் காணப்படும் யானை நன்கு அலங்கரிக்கப்பட்டு ஒரு சாலையில் நடந்து செல்கிறது. அதன் முதுகில் தங்க ஆடை அணிந்த ஒருவர் அமர்ந்துள்ளார். பலர் இதை ‘#kumbhmela2025’ மற்றும் ‘#prayagrajkumbh’ போன்ற ஹேஷ்டேக்குகளுடன் பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு த்ரெட்ஸ் பயனர் வீடியோவைப் பகிர்ந்து, “பிரயாக்ராஜ் கும்பமேளா 2025 இல் 3-தலை கஜானந்த் தர்ஷன்” என்று பதிவிட்டுள்ளார். அத்தகைய ஒரு பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.