நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு நடத்துகிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 19ஆம் தேதி தொடங்குகிறது. 26 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
இதற்குமுன்பாக அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை, இன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தனது இல்லத்தில் நடத்தவுள்ளார்.







